Thursday, May 16, 2013

வண்ணத் தாள்கள்

துரத்துவதற்கு சருகுகளின்றி
அனாதையாய் சுற்றுகிறது காற்று.

இளம் மூங்கில்களில் செய்த
வண்ணத் தாள்களில் பொலிகிறது அழகிய இயற்கையுடன்
நடுப்பக்கத்தில் வன மோகினியின் கவர்ச்சிப்படங்கள்.

காதலிகள் கண்ணீர் துடைத்தெறியும்
மெல்லிய தாள்கள் கீழே விழுகின்றன
மரக்கிளைகள் முறியும் சத்தத்துடன்.


photo credit: S.H.CHOW 

No comments:

Post a Comment